search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே மருமகனை குத்திக்கொலை செய்ய முயன்ற மாமனார்
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல் அருகே மருமகனை குத்திக்கொலை செய்ய முயன்ற மாமனார்

    • தனது குழந்தை களை பார்ப்பதற்காக வாலிபர் தனது மாமனார் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது
    • கத்தியால் குத்தியதில் அவர் பலத்த காயமடைந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அய்யங்கோ ட்டையைச் சேர்ந்தவர் பழனிக்குமரன் (வயது 42). விவசாயி. இவரது மனைவி மலர்விழி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 6 மாத த்துக்கு முன்பு மலர்விழி நிலக்கோட்டை அணைப்ப ட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இன்று தனது குழந்தை களை பார்ப்பதற்காக பழனி குமரன் தனது மாமனார் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பழனிக்குமரனின் மாமனார் பாண்டி கத்தியால் அவரை பல இடங்களில் குத்தினார்.

    இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தகராறை தடுத்து நிறுத்தி காயமடைந்த பழனிக்கு மரனை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இது குறித்து விளாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

    திண்டுக்கல் மேட்டுப்ப ட்டியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 25). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை அங்குள்ள கல்லறை தோட்டம் அருகே தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் கத்தியால் சுரேசை குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

    படுகாயமடைந்த சுரேஷ் திண்டுக்கல் அரசு ஆஸ்ப த்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து நகர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே ஆர்.வி.எஸ். கல்லூரி விடுதியில் தங்கி வேலை பார்த்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 4 இளைஞர்களை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். இது போன்ற கத்திக்குத்து சம்பவங்கள் திண்டுக்கல் நகரில் அடிக்கடி நடந்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    Next Story
    ×