search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனம் மோதி ராணுவ வீரர் பலி
    X

    வாகனம் மோதி ராணுவ வீரர் பலி

    • அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வேகமாக வந்து அரவிந்த்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வடமலைபட்டியைச் சேர்ந்தவர் சிவன். இவரது மகன் அரவிந்த்குமார் (வயது25). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு இந்திய ராணுவத்தில் வீரராக பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் அரவிந்த்குமார் ஒருமாத விடுமுறை எடுத்து நேற்று சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது நேற்று இரவு உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் தொகரப்பள்ளிக்கு சென்றார். அப்போது அவர் தொகரப்பள்ளி அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வேகமாக வந்து அரவிந்த்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அரவிந்த்குமார் பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் அங்கு விரைந்து வந்து அரவிந்த்குமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த சம்பவம்குறித்து தகவலறிந்த மத்தூர் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து அரவிந்த்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணுவத்தில் இருந்து சில மாதங்கள் கழித்து ஒரு மாத விடுமுறையை குடும்பத்தினருடன் கழிப்பதற்காக வந்த ராணுவ வீரர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்டுத்தியுள்ளது.

    Next Story
    ×