search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் மீது வழக்குப்பதிவு
    X

    லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் மீது வழக்குப்பதிவு

    • . இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் அசோக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • 12 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.10 ஆயிரத்து 890 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர் .

    ஈரோடு:

    ஈரோட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் போலீசார் தங்கள் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் வீரப்பன்சத்திரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது பெருந்துறை ரோடு, சஞ்சய் நகர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த குமலன்குட்டை பகுதியைச் சேர்ந்த அசோக் (48) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரிடமிருந்து 12 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.10 ஆயிரத்து 890 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர் . இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் அசோக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் சூரம்பட்டி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சென்னிமலை ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அதேப்பகுதியை சேர்ந்த முஸ்தபா (58) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் எண்களை வெள்ளை தாளில் எழுதி நிச்சயம் பரிசு விழும் என்று கூறி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அவர் மீது சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×