search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வராயன்மலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் 60 லிட்டர் சாராயம் கடத்தல்: வாலிபர் தப்பி ஓட்டம்
    X

    சாராயம் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை படத்தில் காணலாம்.

    கல்வராயன்மலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் 60 லிட்டர் சாராயம் கடத்தல்: வாலிபர் தப்பி ஓட்டம்

    • கல்வராயன் மலை அடிவாரம் அம்மாபேட்டை கிராமம் தண்ணீர் டேங் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • வாலிபர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கல்வராயன் மலையில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வருவதாக கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் கல்வராயன் மலை அடிவாரம் அம்மாபேட்டை கிராமம் தண்ணீர் டேங் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மூட்டைகளுடன் வந்தார். வாலிபர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். உடனே போலீசார் அந்த மூட்டைகளை கைப்பற்றி பிரித்து பார்த்தனர். அதில் 60 லிட்டர் சாராயம் இருந்தது. இதையடுத்து சாராயத்தையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் விசாரணை செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×