பாத்ரூமில் வழுக்கி விழுந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி

சம்பவத்தன்று இவர் வீட்டின் பாத்ரூமுக்கு சென்றார். அப்போது திடீரென நிலை தடுமாறி வழுக்கி கீழே விழுந்தார்.
பாத்ரூமில் வழுக்கி விழுந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை கூட்டுறவு காலனி பிரகதீஸ்வரர் நகரை சேர்ந்தவர் ரமணி (வயது 65). ஓய்வு பெற்ற பதிவுத்துறை உதவி அலுவலர். சம்பவத்தன்று இவர் வீட்டின் பாத்ரூமுக்கு சென்றார். அப்போது திடீரென நிலை தடுமாறி வழுக்கி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து அவரது மனைவி உதய ராணி தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com