search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2000 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை
    X

    திருவிளக்கு பூஜை நடந்தபோது எடுத்த படம்.

    2000 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை

    • கோட்டூர் முத்துமாரியம்மன் கோவிலில் 2000 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது.
    • மதியம் மஞ்சு விரட்டு நடக்கிறது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கோட்டூர் கிராமத்தில் மிகவும் பழமையான முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உற்சவ விழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு அம்மனுக்கு கடந்த திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேக மும், லட்சார்ச்சனை மற்றும் சங்காபிஷேகமும் இரவு கும்மியடியும் நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி நடந்த திருவிளக்கு பூஜையில் 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜை முடிந்தவுடன் அனைவ ருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    பூச்சொரிதல் விழா அம்மன் திருவீதி உலா அதனை தொடர்ந்து நாளை (செவ்வா ய்க்கிழமை) காலை பால்குடம், காவடி, அக்னி சட்டி, இரவு முளைப்பாரி அம்மன் கோவில் வந்தடை கிறது. மறுநாள் (புதன்கிழமை) காலை முளைப்பாரி செலுத்துதல் நடைபெறும். மதியம் மஞ்சு விரட்டு நடக்கிறது.

    முளைப்பாரி திருவிழா பெரியகாரை, கள்ளிக்குடி, அடசிவயல் மற்றும் கோட்டூர் கிராமத்தை சுற்றி யுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் நடை பெறுகிறது.

    Next Story
    ×