search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    25 ஆண்டுகளுக்கு பிறகு அமைக்கப்பட்ட தார்சாலை
    X

    25 ஆண்டுகளுக்கு பிறகு அமைக்கப்பட்ட தார்சாலை

    • 25 ஆண்டுகளுக்கு பிறகு தார்சாலை அமைக்கப்பட்டது.
    • கிராம மக்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது சேர்வை காரன் பட்டி. இங்கு சுமார் 100 குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். 25 ஆண்டுகளாக சிங்கம்புணரி எஸ்.புதூர் செல்லும் மாநில நெடுஞ் சாலையில் இருந்து இந்த கிராமத்திற்கு வர சாலை மோசமாக இருந்தது.

    இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.இதுகுறித்து சிவகங்கை மாவட்ட சேர்மன் பொன்மணி பாஸ்கரனிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். இதையடுத்து அந்த பகுதியை ஆய்வு செய்த அவர் பொதுநிதியில் ரூ.18.03 லட்சம் நிதி ஒதுக்கி சாலை அமைக்க ஏற்பாடு செய்தார்.

    சாலை பணிகள் முடிவடைந்த நிலையில் பொன் மணி பாஸ்கரன் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதை ெதாடர்ந்து பொதுமக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச் சியை வெளிப்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் சிங்கம்பு ணரி வடக்கு ஒன்றிய செயலாளர் திருவாசகம், நகர செயலாளர் வாசு, சேர்வைக்காரன் பட்டி ஊராட்சி தலைவர் பூங் கோதை கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×