search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு புகுந்து வாலிபர்  வெட்டிக்கொலை
    X

    ராகவானந்தம்

    வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை

    • சிவகங்கையில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
    • தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை டி. புதூரைச் சேர்ந்தவர் ராகவானந்தம். இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் ராகவானந்தத்தை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

    ராகவனந்தத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது ராகவானந்தம் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதுபற்றி சிவகங்கை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் ராகவானந்தம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை செய்துவிட்டு தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வீடு புகுந்து வாலிபரை கொலை செய்தது ஏன் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×