search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருதுபாண்டியர்கள் குருபூஜை குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
    X

    மருதுபாண்டியர்கள் குருபூஜை குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

    • திருப்பத்தூரில் மருதுபாண்டியர்கள் குருபூஜை நடக்கயிருப்பதை முன்னிட்டு பாதுகாப்பு குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
    • மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடமான நினைவுத்தூண் (ஸ்தூபி) மற்றும் மணிமண்டபம் ஆகிய பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சுதந்திர போராட்ட தியாகிகளான மருது பாண்டியர்களின் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்த் ஆய்வு மேற் கொண்டார்.

    வருடந்தோறும் அக்டோ பர் மாதம் 24 -ந்தேதி முதல் மருது பாண்டி யர்களின் குருபூஜை தினத்தை அரசு விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகி றது. அதன் அடிப்படையில் திருப்பத்தூர் நகரில் பஸ் நிலையம் எதிரே அமைந் துள்ள மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடமான நினைவுத்தூண் (ஸ்தூபி) மற்றும் மணிமண்டபம் ஆகிய பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் அன்றைய தினங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அமைச்சர்கள், அனைத்து கட்சி பிரமு கர்கள், முக்கியஸ்தர்கள் போன்ற பலரும் ஆயிரக் கணக்கானோர் வருகைதர இருப்பதால் அது குறித்த பாதுகாப்பு மற்றும் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்த முன் ஏற்பாடுகள் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வில் திருப்பத் தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்ம நாதன், நகர் காவல் ஆய்வாளர் கலைவாணி ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×