search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்த மருத்துவ முகாம்
    X



    சித்த மருத்துவ முகாம்

    • சிங்கம்புணரி அருகே சித்த மருத்துவ முகாம் நடந்தது.
    • முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் எழில்மாறன் உள்ளிட்ட குழுவினர் செய்தனர்.

    சிங்கம்புணரி

    சிங்கம்புணரி வட்டாரம் செல்லியம்பட்டி கிராமத்தில் இந்திய மருத்துவத்துறை மற்றும் ஓமியோபதி துறை, பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இம்முகாமில் 250 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமில் சித்த மருந்துகள் வழங்கப்பட்டதுடன் மூலிகை கண்காட்சி, வர்ம சிகிச்சை மாணவர்களுக்கான யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது.

    இம்முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் சின்னையா, தலைமை ஆசிரியர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலமைச்சரின் விரிவான மக்களைத் தேடி மருத்துவ திட்டம் மூலமாக 200 பேருக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் இயன்முறை மருத்துவம் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் சித்தமருத்துவர் சரவணன் மற்றும் ரஹிமா பானு ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் எழில்மாறன் உள்ளிட்ட குழுவினர் செய்தனர்.

    Next Story
    ×