search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஷேக் அப்துல்லா அவுலியா தர்கா சந்தனக்கூடு திருவிழா
    X

    சந்தனக்கூடு கொடி யேற்றம் நடந்தது.

    ஷேக் அப்துல்லா அவுலியா தர்கா சந்தனக்கூடு திருவிழா

    • ஷேக் அப்துல்லா அவுலியா தர்கா சந்தனக்கூடு திருவிழா நடந்தது.
    • இதில் திரளானோர் பங்கேற்பார்கள்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அமைந்துள்ள பிரான்மலை சேக் அப்துல்லா அவுலியா தர்கா சந்தனம் பூசும் விழா மிகவும் பிரசித்தி பெற்ற தாகும்.

    பிரான்மலையில் 2500 அடி உச்சியில் அமைந் துள்ள ஷேக் அப்துல்லா ஒலியுல்லா அவர்களின் அடக்கஸ்தலம் மற்றும் பிரான்மலை அடி வாரத்தில் உள்ள தோப்பு தர்காவிலும் அனைத்து மதங்களைச் சேர்ந்த வர்களும் நேர்த்திக் கடன் வைத்து தங்கள் பிரார்த்த னைகளை கந்தூரி எனப்படும் சமபந்தி விருந்து அளித்து நிறைவேற்றுவது வழக்கம்.

    இந்த தர்ஹாவில் ஆண்டு தோறும் (ரயியுல் அவ்வல் பிறையில்) சந்தனம் பூசும் விழாவிற்காக கொடி யேற்றம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சந்தனம் பூசும் விழா விற்காக மலையடிவாரத்தில் துவா ஓதப்பட்டு கொடி யேற்றம் நடைபெற்றது.

    முன்னதாக 2500 அடி உயரத்தில் உள்ள பிரான் மலை உச்சியில் உள்ள ஷேக் அப்துல்லா ஒலியுல்லாஹ் தர்காவிலும் கொடியேற்றம் நடைபெற்றது.

    வருகிற 6-ந் தேதி சந்தனம் பூசும் விழா நடக்கிறது. அன்று இரவு பிரான்மலை 5 ஊர் கிராமத் தார்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் சுற்று வட்டார பெரியோர்கள் முன்னிலையில் சந்தனக் குடம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 2500 அடி உயரமும் 7 மைல் தூரமுள்ள மலை உச்சியை சென்ற டைந்து 7-ந் தேதி அதிகாலை மலைமீது உள்ள தர்ஹாவில் மதநல்லிணக்க சந்தனம் பூசும் விழா நடைபெற உள்ளது. இதில் திரளானோர் பங்கேற்பார்கள்.

    Next Story
    ×