search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுக்கடைகளில் அதிகாரி திடீர் ஆய்வு
    X

    மது கடையில் கோட்டாட்சியர் பால்துரை ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    மதுக்கடைகளில் அதிகாரி திடீர் ஆய்வு

    • மதுக்கடைகளில் அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • கடைகளில் உள்ள வருகை பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.

    தேவகோட்டை

    தமிழகத்தில் தற்போது அரசு மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் தேவ கோட்டை கோட்டாட்சியர் பால்துரை நகரில் உள்ள அரசு மதுபான கடைகளில் ஆய்வு செய்தார்.

    மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா? மதுபாட்டில் அரசு விலைப்பட்டியல் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். மது கடைகளில் அரசு விலை பட்டியல் நுகர்வோருக்கு தெரியும் படி இருக்க வேண்டும் என்று பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.

    அனுமதி இல்லாத பார்கள் செயல்படுகிறா? டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரும் பணியில் உள்ளார்களா? என்பது குறித்தும் அவர் ஆய்வு செய்தார். கடைகளில் உள்ள வருகை பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.

    பார்கள் இல்லாத மது கடைகளின் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் விற்கப்படும் தண்ணீர் பாட்டில்கள், சிற்றுண்டிகள், தரமாக உள்ளதா? என்றும் ஆய்வு செய்தார்.

    Next Story
    ×