

சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேம்பத்தூர் கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி பரமேஸ்வரி தலைமையில் நடந்தது. இந்த முகாமில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கள் (சட்ட உதவி பாதுகாப்பு வழக்கறிஞர்கள் காளைஈஸ்வரன், கிரன்காளை ஆகியோர் சொத்துஉரிமைச்சட்டம், அடிப்படை உரிமைகள் பற்றி எடுத்துரைத்தனர். வேம்பத்தூர் ஊராட்சி தலைவர் சமயமுத்து வரவேற்று பேசினார். இதில் பொதுமக்கள், மகளிர் குழு உறுப்பினார்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.