search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டாற்று வெள்ளத்தால் அடிக்கடி மூழ்கும் தரைப்பாலம்
    X

    தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதையும், அதில் கார் பயணிப்பதையும் காணலாம்.

    காட்டாற்று வெள்ளத்தால் அடிக்கடி மூழ்கும் தரைப்பாலம்

    • சிங்கம்புணரி அருகே உள்ள அ.காளாப்பூரில் காட்டாற்று வெள்ளத்தால் தரைப்பாலம் அடிக்கடி மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • உடனடியாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அ.காளாப்பூர் அருகில் ஆத்தங்கரைப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    அ.காளாப்பூரில் இருந்து ஆத்தங்கரைப்பட்டி செல்ல பாலாற்றின் குறுக்கே தரைப்பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த தரைபாலம் வழியாக 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இருசக்கர வாகனங்கள், கார்களில் கிராம மக்கள் சென்று வருகின்றனர்.

    சில வாரங்களாக திண்டுக்கல் கரந்தமலை பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாகவும், சிங்கம்புணரியில் பெய்த கனமழை காரணமாகவும், பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அ.காளா ப்பூர் தடுப்பணையில் தண்ணீர் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    மேலும் அ.காளாப்பூர்- ஆத்தங்கரைப்பட்டி தரைப்பாலம் பாலாற்றின் வெள்ளத்தால் மூழ்கியது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து தடைபட்டது.இதனால் அபாயம் அறியாமல் இந்த தரைப்பாலத்தின் வழியாக இரு சக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கிராம மக்கள் வெள்ள நீரையும் பொருட்படுத்தாமல் கடந்து செல்கின்றனர்.

    ஒவ்வொரு முறையும் மழைகாலம், வடகிழக்கு பருவ மழைக்காலம், புயல் காலங்களில் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து தடைபடுவதால் இந்த பகுதி மக்கள் சுமார் 12 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இருசக்கர வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் தரைபாலத்தை கடந்து சென்று வருகின்றனர். ஆத்தங்கரைப்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தரைப்பா லத்தை கடக்க பெற்றோருடன் சென்று வருவதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இங்கு உடனடியாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×