search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம் திறப்பு விழா
    X

    மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம் திறப்பு விழா

    • சிவகங்கை அருகே மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
    • ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் ரேசன்கடை மற்றும் நாடக மேடை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினர்.

    சிவகங்ைக

    சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ. 70லட்சம் மதிப்பிலான மகளிர் சுய உதவிக் குழு கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    மேலும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் ரேசன்கடை மற்றும் நாடக மேடை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினர்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், பொறியாளர் உமாராணி, துணை தலைவர் செந்தில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சரவணன், அம்மா பேரவை துணை செயலாளர் மாரி, மாவட்ட பாசறை துணை செயலாளர் பிரபு, பாசறை இணை செயலாளர் மோசஸ், சதிஷ்பாலு, ஊராட்சி செயலாளர் ஜான்சிராணி, மறவமங்கலம் ஊர் மக்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×