search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிவேக இணைய சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது
    X

    அதிவேக இணைய சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

    • அதிவேக இணைய சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்தார்.
    • அதிவேக இணைய சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு (டான்பி நெட்) நிறுவனம் பாரத்நெட் திட்டம் பகுதி 2 மூலம் இணையதள சேவை வழங் கும் திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த பணிகள் 2 மாதங்க ளில் முழுமையாக நிறைவ டையும். சிவகங்கை மாவட் டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 445 கிராம ஊராட்சிகளில் இந்த சேவை வழங்கப்பட உள்ளது. இதற்காக அமைக்கப்படும் கண்ணாடி இழை கேபிள், தரை வழி யாகவும், மின்கம்பங்கள் மூலமாகவும் இணைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.

    இத்திட்டத்திற்கான உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளில் உள்ள கிராம ஊராட்சி சேவை மையக் கட்டிடம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. அங்குள்ள அறை ஊராட்சி மன்ற தலைவரால் பராமரிக் கப்படுகிறது.

    அதேபோல் உப கரணங்களை பாது காக்கவும், தடையில்லா மின்வசதியை உறுதி செய்ய வும் ஊராட்சி செய லாளர்க ளுக்கு பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையாக செயல் படுத்தப்படும்போது ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்கள் அனைவரும் அவர்கள் வசிக்கும் இடத்தி லேயே அதிவேக இணைய சேவையை பெற முடியும்.

    ஒவ்வொரு ஊராட்சி யிலும் அமைக்கப்பட்டுள்ள மின்கலன், இன்வெர்ட்டர், ரூட்டர், கண்ணாடி இழை உள்ளிட்ட உபகரணங்கள் தமிழ்நாடு அரசின் உடை மையாகும். இவைகளை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபா்கள்மீது இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×