பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் கஜமுக சூரசம்ஹாரம்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் கஜமுக சூரசம்ஹாரம் நடந்தது. 28-ந் தேதி இரவு மயில் வாகனத்திலும், 29-ந் தேதி குதிரை வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் கஜமுக சூரசம்ஹாரம்
Published on

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. குடவரை கோவிலான இங்கு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான விழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாள் முதல் தினமும் காலை மற்றும் இரவில் கற்பக விநாயகர் குதிரை, மயில், சிம்மம், பூதம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். நேற்று கமல வாகனத்தில் விநாயகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவில் 6-ம் நாளான நாளை (27-ந் தேதி) கஜமுக சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.

கோவிலின் வடக்கு கோபுரம் அருகே அன்று மாலை 4.30 மணிக்கு கற்பக விநாயகர் எழுந்தருளி அசுரனை வதம் செய்கிறார்.

28-ந் தேதி இரவு மயில் வாகனத்திலும், 29-ந் தேதி குதிரை வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. 30-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை சந்தன காப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். விநாயகர் சதுர்த்தியான 31-ந் தேதி கோவில்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி, மூலவருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com