தெருநாடகம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தெருநாடகம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சிவகங்கை
சிவகங்கை
Published on

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சிவகங்கை பஸ் நிலையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து தெருநாடகம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதை முதன்மை மாவட்ட நீதிபதி சுமதிசாய்பிரியா தொடங்கி வைத்தார். 

நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் பக்தவச்சலு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்/ சார்புநீதிபதி பரமேஸ்வரி. நேரு இளைஞர்மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர், பிரவீன்குமார், வழக்கறிஞர் சங்கத்தலைவர் நாகேஸ்வரன் ஆகியோர் நேரு இளைஞர் மையத்தின் சார்பில் கலைநிகழ்ச்சிகள் மூலம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

மாவட்டகுழந்தை பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட சமூக அலுவலகம், சைல்டுலைன் ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள் சட்டம் பணி ஆணைக்குழு பணியாளர்கள் சட்டம் சார்ந்த தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com