சிவகங்கையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

மின்கட்டணம், வீட்டுவரி, சொத்துவரி, பால்விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
சிவகங்கையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

சிவகங்கை

சிவகங்கையில் சண்முகராஜா கலையரங்கம் முன்பு நகரசெயலாளர் ராஜா தலைமையில், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடந்தது. மின்கட்டணம், வீட்டுவரி, சொத்துவரி, பால் விலை உயர்வை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அவைத்தலைவர் பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், அருள்ஸ்டிபன், பழனிசாமி, கோபி, சிவாஜி, செல்வமணி, மண்டல தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர் சங்கர்ராமநாதன், குழந்தை, பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், இளைஞரணி துணைச் செயலாளர், மணலூர் மணிமாறன், திருப்புவனம் வக்கீல் மதிவாணன், மருது பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராமச்சந்திரன், உள்ளிட்ட பலர் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com