பள்ளிக்கூட ஆக்கிரமிப்பு அகற்றி நடவடிக்கை

சிவகங்கையில் பள்ளிக்கூட ஆக்கிரமிப்பை அகற்றி நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார். பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பள்ளிக்கூட ஆக்கிரமிப்பு அகற்றி நடவடிக்கை
Published on

சிவகங்கை

சிவகங்கை நகரில் குண்டூர்ணிக்கரை, கோட்டை முனியாண்டி கோவில், வாரச்சந்தை, செக்கடி ஊரணி கரை ஆகிய இடங்களில் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதுபற்றி பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் 40 ஆண்டு பாரம்பரிய மிக்க மன்னர் துரைசிங்கம் மேல் நிலைப்பள்ளி பாதையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டடிங்களை அளவிடும் பணி மேற்கொண்டு அதன் பாதையை மீட்கவும் நகராட்சி தலைவர் சி. எம். துரை ஆனந்த் நேரில் சென்று நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு சொந்தமான இடத்தை சர்வேயர் மூலம் அளந்து அளவீடு செய்தார். அப்போது நகராட்சி பொறியாளர் திலகவதி, துப்புரவு அலுவலர் மூர்த்தி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் அயூப்கான் ராமதாஸ் கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com