காமாட்சி அம்மன் கோவில் உற்சவ விழா தொடக்கம்

மானாமதுரை அருகே காமாட்சி அம்மன் கோவில் உற்சவ விழா தொடங்கியது.
கடம்பவன காமாட்சி அம்மன் கோவில் உற்சவவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடம்பவன காமாட்சி அம்மன் கோவில் உற்சவவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள செய்களத்தூரில் பிரசித்தி பெற்ற கடம்பவன காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் வருடாந்திர மகா உற்சவம் சிறப்பு வாய்ந்ததாக பக்தர்களால் கருதப்படுகிறது.

இந்த ஆண்டு விழா காமாட்சி அம்மன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஆனந்த விநாயகர் சன்னதி முன்பு சிறப்பு கணபதி ஹோமம் நடந்தது.

வருகிற 11ந் தேதி (வெள்ளிக்கிழமை) காமாட்சி அம்மனின் திருபெட்டியுடன் வைகை ஆற்றில் இருந்து புறப்படும் நிகழ்ச்சியும் 12ந்தேதி (சனிகிழமை) காலை பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் மாலை திருவிளக்கு பூஜை வழிபாடும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில்தலைவர் நாகுபாண்டியன், பொதுசெயலாளர் நாகராஜன், பொருளாளர் அன்புக்குமார், துணைத்தலைவர்கள் யாழ்முருகன், முத்துபாண்டியன், இணை செயலாளர்கள் திருஞானம், சரவணன், துணை செயலாளர்கள் ராஜா, பழனியப்பன் மற்றும் செய்களத்தூர் கடம்பவன காமாட்சி அம்மன் கோவில் பங்காளிகள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com