search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவாபுரியில் விதிமுறைகளை மீறும் நடைபாதை கடைகள் அகற்றப்படும்- அதிகாரிகள் எச்சரிக்கை
    X

    சிறுவாபுரியில் விதிமுறைகளை மீறும் நடைபாதை கடைகள் அகற்றப்படும்- அதிகாரிகள் எச்சரிக்கை

    • வியாபாரிகள் குறிப்பிட்ட இடத்தை மீறி சாலையை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது.
    • கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீதும் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொன்னேரி:

    சிறுவாபுரியில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். கோவிலை சுற்றி உள்ள நடைபாதை, சாலையோர கடைகளால் பக்தர்களுக்கு இடையூறும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது.

    இதையடுத்து கோவில் அருகே உள்ள நடைபாதை கடைகளை அகற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை கூட்டம் சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. தாசில்தார் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன், ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அப்போது அதிகாரிகள் கூறும்போது, வியாபாரிகள் குறிப்பிட்ட இடத்தை மீறி சாலையை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. கடை முன்பு வாகனங்கள் நிறுத்தக்கூடாது. புதிய வியாபாரிகள் அனுமதிக்க கூடாது. நடைபாதை வியாபாரிகள் விதிமுறைகளை கடை பிடிக்காவிட்டால் கோவில் அருகே இருபுறத்தில் உள்ள கடைகள் முழுவதும் அகற்றப்படும். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீதும் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    இந்த கூட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

    Next Story
    ×