search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை படைத்த வீரர்களுக்கு பாராட்டு
    X

    துப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை படைத்த வீரர்களுக்கு பாராட்டு

    • சேரா பயிற்சி மையத்தை சேர்ந்த ராம்குமார் மற்றும் அனு பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
    • ஆக்ஸ்போர்டு பள்ளி தாளாளர் ஆன்டோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளை பாராட்டினார்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சேரா துப்பாக்கிசுடும் பயிற்சி மையம் ராகல்பாவி பிரிவில் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வருகிறது. 9 வயது சிறுவர்கள் முதல் 90 வயதிற்கும் மேல் உள்ள நபர்கள் வரை இங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

    14க்கும் மேற்பட்ட வீரர்கள் 47வது தமிழ்நாடு மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்குபெற்று உள்ளனர். மேலும் தெற்கு மண்டல அளவிலான போட்டிகளில் நான்கு வீரர்கள் தகுதி பெற்று, 65வது தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், சேரா பயிற்சி மையத்தை சேர்ந்த ராம்குமார் மற்றும் அனு பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    இந்த வீரர்களை கவுரவித்து பாராட்டு சான்றிதழ்களையும், கேடயங்களையும் வழங்கும் விழா குடியரசு தினத்தன்று உடுமலைப்பேட்டை காவல்துறை துணைகண்காணிப்பாளர் தேன் மொழிவேல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆக்ஸ்போர்டு பள்ளி தாளாளர் ஆன்டோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளை பாராட்டினார்.

    வருங்காலத்தில் மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீரர்களை உருவாக்குவதே 'சேரா துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தின் குறிக்கோள் என மையத்தின் செயலாளர் ரவிக்குமார் தெரிவித்தார். விழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×