

கடலூர்:
கடலூர் அருகே தோட்டப்பட்டு பகுதியில் தனியார் மருத்துவமனையில் கோண்டூர் சேர்ந்த ஜானகிராமன் இரவு காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் 3 பேர் கொண்ட கும்பல் திடீரென்று மருத்துவமனையில் இருந்த ஜானகிராமனிடம் வீண் தகராறு செய்து தாக்கினார்கள். பின்னர் அங்கு இருந்த ஷேர் ஆட்டோ கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி தப்பி ஓடினர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் ஜெயக்குமார், உதயா, அஜித் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.