search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலியல் தொல்லை வழக்கு: விழுப்புரம் கோர்ட்டில் போலீஸ் சூப்பிரண்டு சாட்சியம்
    X

    போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், இன்ஸ்பெக்டர் பிதுன்குமார் ஆகியோர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். 

    பாலியல் தொல்லை வழக்கு: விழுப்புரம் கோர்ட்டில் போலீஸ் சூப்பிரண்டு சாட்சியம்

    • பாலியல் தொல்லை வழக்கு: விழுப்புரம் கோர்ட்டில் போலீஸ் சூப்பிரண்டு சாட்சியம் அளித்தார்.
    • வழக்கு விசாரணை நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நடந்தது.

    விழுப்புரம்:

    பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

    இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கில், குறுக்கு விசாரணையை தொடங்கி 12 நாட்கள் நடந்தது.

    இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு தாக்கல் செய்த மனுவுக்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்காக இன்று விசாரணையை ஒத்திவைத்தார்.

    அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணை நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நடந்தது.

    இதற்காக போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், இன்ஸ்பெக்டர் பிதுன்குமார் ஆகியோர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

    Next Story
    ×