search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செப்பறை அழகிய கூத்தர் கோவில்  ஆனி திருவிழா கொடியேற்றம்
    X

    கொடியேற்றம் நடந்ததையும், கொடிமரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டதையும் படத்தில் காணலாம்.

    செப்பறை அழகிய கூத்தர் கோவில் ஆனி திருவிழா கொடியேற்றம்

    • திருவிழா நாட்களில் காலை,மாலை வேளைகளில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜையும், வீதி உலாவும் நடைபெறுகிறது.
    • திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 4-ம் தேதி நடைபெறுகிறது.

    நெல்லை:

    சிவபெருமான் திருநடனம் ஆடிய 5 சபைகளில் ஒன்றான தாமிரசபை அமைந்துள்ள நெல்லை மாவட்டம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆண்டுக்கு 2 முறை திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

    ஆனித்திருமஞ்சன விழாவை முன்னிட்டு முன்னிட்டு 10 நாட்கள் நடைபெறும் ஆனி திருவிழாவின் தொடக்கமான கொடியேற்றுதல் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

    அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கொடிப்பட்டம் பல்லக்கில் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    இதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகம், திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழா நாட்களில் காலை,மாலை வேளைகளில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜையும், வீதி உலாவும் நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்வாக வருகிற 2-ம் தேதி நடராஜர் தாமரை சபையிலிருந்து விழா மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி மற்றும் பச்சை சாத்தி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 4-ம் தேதியும், ஆனித் திருமஞ்சனம் 5-ம் தேதியும் நடைபெறுகிறது.

    Next Story
    ×