அனுமதிபெறாத வாகனங்கள் பள்ளியின் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது கண்டறிந்தால் பறிமுதல்: விழுப்புரம் கலெக்டர் எச்சரிக்கை

அனுமதிபெறாத வாகனங்கள் பள்ளியின் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது கண்டறிந்தால் பறிமுதல்: விழுப்புரம் கலெக்டர் எச்சரிக்கை விடுத்தள்ளார்போக்குவரத்துத்துறையின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, அனுமதிக்கப்பட்ட வாக னங்கள் மட்டுமே பள்ளி பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும்.
பள்ளி வாகனங்களை மாவட்ட கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார். 
பள்ளி வாகனங்களை மாவட்ட கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார். 
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாக மைதானத்தில், வட்டார போக்குவரத்துத் துறையின் மூலம், நடப்பு கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறந்ததை யொட்டி, பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

இப்பணியினை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு .ஸ்ரீநாதா முன்னிலை யில், மாவட்ட கலெக்ட–ர்மோகன்அவர்கள் தலைமை–யேற்று பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியினை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு முதல்- அமைச்சர் உத்தரவிற்கி ணங்க நடப்பு கல்வியாண்டிற்கு பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி, பள்ளி வாகனங்கள் முழுமை யாக பரிசோதனை செய்து இயக்கிடும் வகையில் வட்டார போக்கு வரத்துத்துறையின் மூலம் இப்பணியினை மேற்கொள்ள உத்தரவிட்டு அதனடிப்படையில் மாவட்டத்தில் 187 பள்ளி வாகனங்கள் பயன்படு–த்தப்பட்டு வருவதை பரிசோத னைக்கு உட்படு–த்தப்ப–ட்டுள்ளன. அதில் 147 வாகனங்கள் முழுமையாக ஆய்வு செய்து வாகனங்கள் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 15 வாகனங்கள் பழுதடைந் துள்ளதை கண்டறிந்து அதை சரிசெய்து மீண்டும் வாகனத்தை கொண்டு அனுமதி பெற்றுச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்கள் நாளை ஆய்வுக்கு கொண்டு வர உள்ளார்கள். பள்ளி வாகனங்களை பொறுத்த வரை வட்டார போக்குவரத்துத்துறையின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, அனுமதிக்கப்பட்ட வாக னங்கள் மட்டுமே பள்ளி பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும். அனுமதிபெறாத வாக னங்கள் பள்ளியின் பயன் பாட்டிற்கு பயன்படுத்து வது கண்டறிந்தால் வாக னங்களை பறிமுதல் செய்வ துடன், வாகன ஓட்டுநர் உரிமமும்ரத்து செய்ய–ப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com