அனுமதியின்றி கற்கள், மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்

காக்கனுர் செக்போஸ்ட் பகுதியில் பாகலூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.எம்சாண்ட் தலா 3 யூனிட்டும், 5 யூனிட் கற்கள் கடத்தி செல்வது தெரிய வந்தது
அனுமதியின்றி கற்கள், மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி மற்றும் பாகலூர் போலீசார் அந்திவாடி மற்றும் காக்கனுர் செக்போஸ்ட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதி வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதி இன்றி எம் சாண்ட் இரண்டு டிப்பர் லாரிகளில் தலா 3 யூனிட்டும்,மற்றொரு லாரியில் 5 யூனிட் கற்கள் கடத்தி செல்வது தெரிய வந்தது இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரிகளை பறிமுதல் செய்தனர் .

மேலும் லாரி டிரைவர்கள் போலீசாரை பார்த்ததும் லாரி நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com