search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடோனில் பதுக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது
    X

    பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் கைது செய்யப்பட்டவர்.

    குடோனில் பதுக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது

    • ஒரு குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கபட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.
    • சுமார் ரூ,5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, திருக்களாச்சேரி, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். இவரிடம் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், சேங்கலித் தெருவை சேர்ந்த கமல்தாஸ் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் மகேந்திரன் பொறையார் அருகே காளியப்பன் நல்லூர் ஊராட்சி கண்ணப்ப ன்மூலை கிராமத்தில் உள்ள ஒரு குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கபட்டு ள்ளதாக மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு போலீசார்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின் பேரில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெ க்டர் செல்வி தலைமை யிலான போலீசார்கள் தலைமை காவலர்கள் மகேந்திரன், அன்பரசன், விஜய் கணேஷ், மற்றும் போலீசர்கள் செந்தில், மனோகர், மகேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ,5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக கமல்தாஸ் என்பவரை கைது செய்துள்ளனர். உரிமையாளர் மகேந்திரன் மற்றும் அவர் கூட இருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×