search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே ஆற்று மணல் கடத்திய மினி லாரி பறிமுதல்; டிரைவர் கைது
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே ஆற்று மணல் கடத்திய மினி லாரி பறிமுதல்; டிரைவர் கைது

    • சப்-இன்ஸ்பெக்டர் மணி கண்டன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் நேற்று இரவு ஈடுபட்டனர்.
    • சாக்கு மூட்டையில் தென்பெண்ணையாற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே தெம்மார் ஆஞ்ச நேயர் கோவில் அருகே திரு வெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மணி கண்டன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் நேற்று இரவு ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சாக்கு மூட்டையில் தென்பெண்ணையாற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து மினி லாரி டிரைவர் எரலூரை சேர்ந்த விஜய் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×