search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடத்தலுக்காக பதுக்கி வைக்கப்பட்ட 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
    X

    கடத்தலுக்காக பதுக்கி வைக்கப்பட்ட 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

    • குடிமை பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரவியை போலீசார் தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே வைத்தியநாதபுரம் கிராமத்தில் ரவி என்பவர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியை கோழி தீவனத்துக்கு கடத்த இருப்பதாக குடிமை பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அதிகாரிகள் இன்று சோதனை செய்தனர். அப்போது ரவிக்கு சொந்தமான இடத்தில் 25 மூட்டையில் 1 ½ டன் ரேஷன் அரிசி இருந்தது. பின்னர் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்த இருந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரவியை போலீசார் தேடி வருகின்றனர். இது போன்ற கிராமங்களில் அரிசி வாங்கி கோழி தீவனத்துக்காக கடத்தும் நபர்கள் பற்றியும் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×