search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில்   பஸ் நிறுத்தத்தில் காவலாளி தீக்குளித்து தற்கொலை
    X

    தூத்துக்குடியில் பஸ் நிறுத்தத்தில் காவலாளி தீக்குளித்து தற்கொலை

    • குடும்பத் தகராறு காரணமாக சண்முகசுந்தரம் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
    • நேற்று இரவு ெரயில் நிலையம் அருகே உள்ள மட்டக்கடை பஸ் நிறுத்தத்தில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மட்டக்கடை 1-ம் கேட் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது53). இவர் லாரி செட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக சண்முகசுந்தரம் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இதனால் ஒரு வாரமாக வீட்டுக்கு செல்லாமல் இருந்த அவர் நேற்று இரவு ெரயில் நிலையம் அருகே உள்ள மட்டக்கடை பஸ் நிறுத்தத்தில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார்.

    இதில் உடல் கருகி படுகாயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார்.

    இது குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×