என் மலர்
உள்ளூர் செய்திகள்

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த இருந்த 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
- கடல் வழியாக கஞ்சா, புகையிலை, பீடி இலைகள் மற்றும் மருந்துகள் ஆகியவை அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன.
- போலீசார் வேதாளை பஸ் ஸ்டாப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்த கடல் வழியாக தங்கம், கஞ்சா, புகையிலை, பீடி இலைகள் மற்றும் மருந்துகள் ஆகியவை அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களாகன கடல் குதிரை, திமிங்கல எச்சம் போன்றவையும் கடத்தப்படுகிறது. இந்த நிலையில் மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதிக்கு இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கடல் அட்டைகள் கொண்டு வருவதாக மண்டபம் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் வேதாளை பஸ் ஸ்டாப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த காரை சோதனை செய்த போது அதில் 5 மூடைகளில் 250 கிலோ கடல் அட்டைகள் இருந்தது. இதுதொடர்பாக மரைக்காயர்பட்டினத்தை சேர்ந்த வாகன ஓட்டுநர் சுல்தான் மகன் சாகுல் ஹமீது (37) போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகளை கடத்திருந்த தாக தெரிய வந்தது, இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.






