search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்ன மாமனாருக்கு அரிவாள் வெட்டு
    X

    சின்ன மாமனாருக்கு அரிவாள் வெட்டு

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகாரறு
    • மீண்டும் மனைவியை குடும்பம் நடத்த அழைத்து செல்வதற்காக சென்றார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள செம்மண்கூடல் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 47). இவரது அண்ணன் மகள் கார்த்திகா என்பவருக்கும் காடையாம்பட்டி அருகில் உள்ள கொங்குப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஏழுமலைக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    இவர்களுக்கு 8 வயதில் ஒருமகன் உள்ளான். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகாரறு ஏற்பட்டு கார்த்திகா தனது அம்மா வீட்டிற்கு சென்று விடுவது வழக்கம். அவ்வாறு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணவருடன் சண்டை போட்டு கொண்டு செம்மண்கூடலில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றார். இதனால் ஏழுமலை மீண்டும் மனைவியை குடும்பம் நடத்த அழைத்து செல்வதற்காக சென்றார். அப்போது கார்த்திகாவின் அண்ணன் ரஞ்சித், குமார் ஆகியோருக்கும் ஏழுமலைக்கும் தகாரறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஏழுமலை தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து குமாரை வெட்டினார். இதில் குமாருக்கு கையில் வெட்டு விழுந்தது.

    இதை பார்த்த அக்கம் பக்கம் இருந்த குமாரின் உறவினர்கள் ஏழுமலையை திருப்பி தாக்கியுள்ளனர். இதுகுறித்து இரு தரப்பினரும் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த ஏழுமலை மற்றும் ரமேஷ், ரஞ்சித், மாரியப்பன், செல்வம், ஜெகன், பூபாலன், ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×