search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை பள்ளிகள் திறப்பு - சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்களால் போக்குவரத்து நெரிசல்
    X

    நாளை பள்ளிகள் திறப்பு - சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்களால் போக்குவரத்து நெரிசல்

    • கோடை விடுமுறை முடிந்து நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
    • செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    2023-2024-ம் கல்வியாண்டில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு நாளையும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு வரும் 14-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்கள் நாளை திறக்கப்பட உள்ளன.

    இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

    செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று மெதுவாக ஊர்ந்து செல்கிறது.

    Next Story
    ×