search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டை அருகே பள்ளி மாணவி மாயம்
    X

    கோப்பு படம்

    நிலக்கோட்டை அருகே பள்ளி மாணவி மாயம்

    • 17 வயது பிளஸ்-2 மாணவி பள்ளிக்கு சென்ற நிலையில் திடீரென மாயமானார்.
    • மாணவி மாயமானாரா அல்லது கடத்தப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே 17 வயது பிளஸ்-2 மாணவி தனியார் பள்ளியில் படித்து வந்தார். நேற்று காலை பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவரது பெற்றோர் நிலக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா ஆகியோர் வழக்குபதிவு செய்து மாணவி மாயமானாரா அல்லது கடத்தப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×