search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூரில் பள்ளி மாணவி தற்கொலை
    X

    திருவாரூரில் பள்ளி மாணவி தற்கொலை

    • கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர்.
    • ஷாலினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் நகரத்திற்குட்பட்ட அண்ணா காலணி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் மகேஸ்வரி.இவரது கணவர் கலிய பெருமாள்.இவர் கோயம்பு த்தூரில் கொத்தனராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 5 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஷாலினி அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மேலும் மகேஸ்வரி திருவாரூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் மகேஸ்வரி நகை கடைக்கு சென்று விட ஷாலினி தனது பள்ளிக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து மகேஸ்வரி வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது ஷாலினி மின்விசிறியில் தனது துப்பட்டாவின் மூலம் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.

    இது குறித்து திருவாரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில் முதற்கட்டமாக ஷாலினி அடிக்கடி மொபைல் போனில் பேசி வந்ததாகவும் இதுகுறித்து மகேஸ்வரி கண்டித்த காரணத்தினால் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிய வருகிறது.

    மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×