search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சசிகலா, அ.தி.மு.க.வில் புதிதாக இணைய வேண்டிய அவசியமில்லை -கோவை செல்வராஜ் சொல்கிறார்
    X

    சசிகலா, அ.தி.மு.க.வில் புதிதாக இணைய வேண்டிய அவசியமில்லை -கோவை செல்வராஜ் சொல்கிறார்

    • முனுசாமி செய்தியாளர் சந்திப்பில் ஓ.பி.எஸ்.சை தவறாக கொச்சைப்படுத்தி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    • முனுசாமிக்கு கட்சியில் 2-ம் தலைவராக வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் ஓ.பி.எஸ்.

    கோவை

    அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியின் கோவை மாநகர், மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    முனுசாமி செய்தியாளர் சந்திப்பில் ஓ.பி.எஸ்.சை தவறாக கொச்சைப்படுத்தி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.அம்மாவால் விரட்டி அடிக்கப் பட்டவர் முனுசாமி. முனுசாமிக்கு கட்சியில் 2-ம் தலைவராக வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் ஓ.பி.எஸ்.

    ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.க வில் உழைக்கவில்லை என்று சொல்கிறார்.ஆனால் ஜெயலலிதா, ஓபிஎஸ் கட்சிக்கு கிடைத்தது தான் செய்த பாக்கியம் என்றார். விசுவாசம் மிக்க தொண்டன் என்ற பெயரை ஜெயலலிதாவிடம் வாங்கியவர் ஓ. பன்னீர்செல்வம். அவரை பற்றி பேச யாருக்கும் தகுதி யோக்கியதை கிடையாது.

    எடப்பாடி பழனிசாமி அனைத்தையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் அவரது ஆட்சியில் நடந்த ஊழல் பட்டியலை வெளியிடுவேன்.

    கட்சி அலுவலகத்தில் விலை உயர்ந்த பொருட்கள் திருட்டுப்போனதாக புகார் தெரிவித்துள்ளார்கள். ஆனால் கட்சி அலுவலகத்தில் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லை. கடந்த தேர்தலில் கட்சியின் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி.

    சசிகலா தற்போது கட்சியின் உறுப்பினர். எப்போதும் போல அவர் இருப்பார். மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×