தருமபுரி நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

750 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.ஆதனூர் கிராமம் நெடுஞ்சாலை ஓரத்தில் 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தருமபுரி நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
Published on

தருமபுரி,

தமிழ்நாடு முன்னாள் முதல் அமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை ஓரங்களில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தருமபுரி கோட்டத்திற்குட்பட்ட சாலை ஓரங்களில் 12000 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 750 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக ஒகேனக்கல், பென்னாகரம், தருமபுரி, திருப்பத்தூர் சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் ஆதனூர் கிராமம் நெடுஞ்சாலை ஓரத்தில் 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் மாவட்ட கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com