search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடத்தூர் அருகே மரக்கன்றுகள் நடும் விழா
    X

    கடத்தூர் அருகே மரக்கன்றுகள் நடும் விழா

    • பாப்பி ரெட்டிப்பட்டி சாலைகளில் 2400 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • நெடுஞ்சாலை துறை சார்பில் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.

    கடத்தூர்,

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதை தொடர்ந்து தமிழகத்தில் ரோட்டோரங்களில் சுமார் 5 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

    அதற்கான மரக்கன்று நடுவிழாவை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலை துறை சார்பில் அரூர், தென்கரைக்கோட்டை, பள்ளிப்பட்டு பாப்பி ரெட்டிப்பட்டி சாலைகளில் 2400 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ள்ளது.

    இதனையடுத்து சுமார் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.

    இதில் பாப்பிரெட்டி ப்பட்டி உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் சாலை பணியாளர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×