என் மலர்
உள்ளூர் செய்திகள்

துணியால் சுற்றப்பட்டு வெயிலில் கிடக்கும் சுவாமி சிலைகள்.
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் வெயிலில் கிடக்கும் சாமி சிலைகள் பக்தர்கள் அதிர்ச்சி
சேலம்:
சேலம் மிகவும் பிரசித்தி பெற்றதும், பழைமை வாய்ந்ததுமான சுகவனேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து சாமியை தரிசனம் செய்து செல்கிறார்கள்.
மூகூர்த்த நாட்களில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும். இந்த கோலிலுக்கு கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி கும்பாபிேஷகம் நடந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தை கருதி கோவிலை விரிவு படுத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி நடந்து வருகிறது. அப்பபோது பல சுவாமி சிலைகள் அகற்றப்பட்டதுடன் மேற்கு புற வாசல் கதவு சாத்தப்பட்டது. சுகவனேஸ்வரர் சன்னதியில் துவார பாலகர்கள் சிலை அகற்றப்படாமல் துணி போர்த்தி வைக்கப்பட்டு உள்ளது.
ஆனால் சொர்ணாம்பிகை சன்னதியில் இருந்த துவாரபாலகிகளின் கற்சிலைகள் அகற்றப்பட்டு சிலை தெரியாத படி துணியால் மறைத்து கட்டி கீேழ கிடத்தப்பட்டுள்ளது. அந்த சிலைகள் வெயிலிலும் , மழையிலும் நனைந்த படி உள்ளது. இதனால் பார்க்கும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே அந்த சாமி சிலைகளை புகைப்படம் எடுத்து ஏற்கனவே அகற்றப்பட்ட சிலைகளின் கதி என்ன என கூறி சமூக வலை தளங்களில் பக்தர்கள் சிலர் வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.






