தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளிக்கு சரமாரி கத்திக்குத்து

அபிமன்னனை அஜித், தர்மராஜ் உள்பட 3 பேர் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக குத்தி, வெட்டினர்.இதில் அபிமன்னன் தலையின் பின்பக்கம், நெற்றி ஆகிய பகுதியில் வெட்டுப்பட்டு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில்  உப்பளத் தொழிலாளிக்கு சரமாரி கத்திக்குத்து
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி முத்தையா புரம் முடுக்குகாடு கிழக்கு தெருவை சேர்ந்தவர் அபிமன்னன் (வயது42). உப்பளத் தொழிலாளி.

இவர் புதிய துறைமுகம் மதுரை பைபாஸ் சாலை, முடுக்குகாடு விலக்கு எதிரில் உள்ள பங்களா செட் உப்பளத்தில் நேற்றிரவு வரும் போது, அங்கு நின்ற அஜித், தர்மராஜ் உள்பட 3 பேர் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக குத்தி, வெட்டி னர். இதில் அபிமன்னன் தலையின் பின்பக்கம், நெற்றி ஆகிய பகுதியில் வெட்டுப்பட்டு ரத்த காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுந்தர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சரவண ரமேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு தப்பி ஓடிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com