

வாழப்பாடி,
வாழப்பாடி அடுத்த சிங்கிபுரத்தில் பழமையான பட்டீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
3 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வந்த இக்கோவில் திருப்பணி சமீபத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. சிங்கிபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சன்னதியில் கூடியிருந்த பக்தர்களுக்கு புனித கலச தீர்த்தம் தெளிக்கப்பட்டது.