

ஆட்டையாம்பட்டி:
சேலம் அருகே கொண்டலாம்பட்டி அடுத்துள்ள உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவிலில் இன்று தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு அபிஷேக ஆராதனை பூஜையும் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.
காலபைரவர் சாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் உற்சவர் காலபைரவர் கோவில் வளாகத்தில் வலம் வந்தது.
இதில் சேலம் குகை, நெய்க்காரப்பட்டி, அரியானூர், வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி, சமத்துவபுரம், பூலாவரி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.