

மகுடஞ்சாவடி:
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள வைகுந்தம் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன். இவரது மகன் காவிரி. இவர் அரசுக்கு சொந்த மான நல்ல தண்ணீர் குட்டை புறம்போக்கு நிலத்தில் 2 சென்ட் நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டினார்.
இதுபோல் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் சின்ன பையன் என்பவர் அரசுக்கு சொந்தமான 2 சென்ட் நிலத்தில் வீடு கட்டினார். இது பற்றி அறிந்த சங்ககிரி வட்டாட்சியர் பானுமதி தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு அரசு நிலத்தை மீட்டனர்.