

மேட்டூர்:
கொரோனா தொற்று பரவலை தடுக்க பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மேட்டூர் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருக்கும்.
இதனால் மக்கள் கூடுவதை தவிர்க்க மேட்டூர் பூங்காவில் கடந்த 31 ம் தேதி முதல் நேற்று வரை 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 3 நாட்களுக்குப் பிறகு இன்று காலை முதல் மேட்டூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.