

சேலம்:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் அமைக்–கப்பட்டுள்ள 182 மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப் பட்டுள்ள 80-க்கும் மேற்பட்ட மையங்களிலும் தேர்வு நடைபெற்று வருகின்றன.
அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப்பள்ளிகளை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வுகள் எழுதி வருகின்றனர்.
நேற்று (21-ந்தேதி) சனிக்கிழமை தொழில் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது. நாளை (23-ந்தேதி) ேதர்வு கிடையாது. மாணவ- மாணவிகள் படிக்கும் விதமாக நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து நாளை மறுநாள் (24-ந் தேதி) செவ்வாய்க்கிழமை கணிதப் பாட தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வுகள் காலை 10.15 மணிக்கு தொடங்கி 1.15 மணி அளவில் முடிவடைகிறது.