மத்திய அரசின் காப்பீட்டு திட்டங்களுக்கு பிரீமியம் தொகை அதிகரிப்பு

மத்திய அரசின் காப்பீட்டு திட்டங்களுக்கு பிரீமியம் தொகை அதிகரிப்பு சேலம் மாவட்டத்தில் பல ஆயிரம் பேர் பயனடைந்தனர்.
.
.
Published on

சேலம்:

இந்திய அரசு ரூ.2 லட்சத்துக்கான ஆயுள் காப்பீடு வழங்கும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா ேயாஜனா ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது.

இதில் ஜீவன் ேஜாதி காப்பீடு திட்டத்தில் வங்கி அல்லது தபால் நிலைய சேமிப்பு கணக்கு வைத்துள்ள 18 வயது முதல் 50 வயது வரையிலானோர் சேர்ந்து கொள்ளலாம்.   அதே போல் சுரக்‌ஷா திட்டத்தில் 18 வயது முதல் 70 வயது  வரையிலானோர் இணைந்து கொள்ளலாம் என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களில் தினமும் பல ஆயிரம் பேர் சேர்ந்து வருகிறார்கள். அதுமிட்டுமின்றி ஒவ்வொரு வருடமும் பல லட்சம் குடும்பங்கள் இந்த திட்டங்களினால் பயனடைந்து வருகின்றனர்.

குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் பேர்  தபால் மற்றும் வங்கிகள் மூலமாக மேற்கண்ட திட்டங்களில் சேர்ந்து உள்ளனர்.  ஜீவன் ேஜாதி திட்டத்துக்கான பிரீமியம் தொகை ஆண்டுக்கு ரூ. 330 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.436 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுரக்‌ஷா காப்பீடு திட்டத்துக்கான ஆண்டு பிரீமியம் தொகையும் ரூ.12-ல் இருந்து ரூ.20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரீமியம் மூலமாக கிடைக்கும் வருவாயை விட காப்பீட்டாளர்களுக்கு வழங்கப்படும் தொகை அதிகமாக இருப்பதாக நிறுவனங்கள் ெதரிவித்து வந்த நிலையில் பிரீமியம் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய விதிகள் இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி நிலவரப்படி ஜீவன் ேஜாதி திட்டத்தில் 6.4 கோடி பேரும், சுரக்‌ஷா திட்டத்தில் 22 கோடி பேரும் இணைந்துள்ளனர்.  இந்த 2 திட்டங்களின் கீழும் காப்பீடு தொகை கோருவோருக்கு நேரடியாக வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com