

சேலம்:
சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது29). என்ஜினீயரான இவர் சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவர் ஊருக்கு வந்தார்.
இந்த நிலையில் அவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பற்றி அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.