

சேலம்:
வருகிற 14 -ந் தேதி மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் உரிமம் பெற்ற ஓட்டல், கிளப்புகளில் இயங்கி வரும் மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது..
அன்று மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. இதனை மீறி நடப்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.